புலம்பெயர் நாடுகள்/ தமிழீழ-விடுதலைப்-புலிகள்-அமைப்பின்-தலைவரும்-,தமிழீழ-தேசிய-தலைவரும்,-உலகிற்கு-தமிழனுக்கு-முகவரி-தந்த-தானைத்-தளபதியுமாகிய-மேதகு-வேலுபப்பிள்ளை-பிரபாகரனிற்கு-இன்று-அகவை-63

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும் ,தமிழீழ தேசிய தலைவரும், உலகிற்கு தமிழனுக்கு முகவரி தந்த தானைத் தளபதியுமாகிய மேதகு வேலுபப்பிள்ளை பிரபாகரனிற்கு இன்று அகவை 63
மாலை நெஞ்சன் பிரபாகரன் கனல் மூச்சால்
மண் மீண்டும் அதிர்வு கொள்ளும்
அலை கடல் எனத் தமிழ் ஈழம் கொதிக்கும்!
அடிமைக் கைத்தளை நொருங்கும்!
கொலைவெறிச் சிங்களவர் கோட்டை குலுங்கும்!
தலைநிமிர்வோடு தமிழீழ நாடு
தன்பகை நொருங்கி வெல்லும்!
இணையில்லாப் பிரபாகரன் என்னும் ஆற்றல்
இன்றில்லை என்பவன் யார்?
அணையுமா தமிழீழ மக்கள் அகத்தில்
அவன் மூட்டி வைத்த செந்தீ
கணை எமக்களித்தோம் போர்க்களமாட வைத்தோன்
காவலாய்த் துணை இருப்பான்
சுணையுள தமிழரீர் எழுவீர் பகை நஞ்சர்
சூழ்ச்சிகளைத் தகர்த்து வெல்வோம்!
ஆரடா பிரபாகரனெனும் அறத்தின்
அனல் மலை உடைக்க வல்லான்
வீரன் அவன் போர் ஆணை இன்றும் நெஞ்சில்
வெடித்தெழ விம்முகின்றோம்
போரணி மீண்டும் புனைதல் தமிழர் தம்
பொறுப்பெனச் செப்புகிறான்
பாரனைத்தும் குலுங்கப் படை எடுப்போம்!
பகை உடைத்தெழுவோம் வாரீர்!
நிலமிசை பிரபாகரன் மண் வியக்கும்
மாபெரும் இயக்கம் ஆனான்
அறம் விழும் காலம் அவன் எழும் காலம்
அதனால் நம்மிடையே வந்தான்
விறல் மிகு வேங்கை தமிழீழ மண்ணின்
வேலியாய் நின்ற வீரன்!
”புறம்” ஒன்றே விடுதலை பெறும் பாதை என்றான்
புயலாவோம் !விடியல் செய்வோம்!
-கவிஞர் காசி ஆனந்தன்