ஹமாஸ் இயக்கத்தின் பிடியிலுள்ள ஏனைய பணய கைதிகளையும் விடுவிக்கும் வகையில் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
புதிய யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கட்டார் தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெட்டன்யாஹு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துவது தொடர்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஹமாஸ்சிற்கு எதிரான போரானது அழுத்தம் மற்றும் செலவுகள் நிறைந்தது என்ற போதிலும் வெற்றிக்காக போராட வேண்டும் எனவும் பெஞ்ஜமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.