யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் தென்னிலங்கை மாணவன் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , மாணவனை கைது செய்து சோதனையிட்ட போது , போதை பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து மாணவனை கைது செய்த பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துன்னார்.